நாலாயிர திவ்வியப் பிரபந்தம் – 68 | Naalayira Divya Prabandham – 68

மத்தள வுந்தயிரும் வார்குழல் நன்மடவார்
வைத்தன நெய்களவால் வாரிவி ழுங்கி, ஒருங்
கொத்தவி ணைமருத முன்னிய வந்தவரை
ஊருக ரத்தினொடும் உந்திய வெந்திறலோய்!
முத்தினி ளமுறுவல் முற்றவ ருவதன்முன்
முன்னமு கத்தணியார் மொய்குழல் களலைய,
அத்த!எ னக்கொருகா லாடுக செங்கீரை,
ஆயர்கள் போரேறே! ஆடுக ஆடுகவே.

 


Leave a Comment

Your email address will not be published.