Manthiram

ஆறாம் திருமுறை புக்க திருத்தாண்டகம் 5

காரார் கமழ்கொன்றைக் கண்ணி சூடிக் கபாலங்கை யேந்திக் கணங்கள் பாட
ஊரா ரிடும்பிச்சை கொண்டு ழலும் உத்தம ராய்நின்ற ஒருவ னார்தாஞ்
சீரார் கழல்வணங்குந் தேவ தேவர் திருவாரூர்த் திருமூலட் டான மேயார்
போரார் விடையேறிப் பூதஞ் சூழப் புலியூர்ச்சிற் றம்பலமே புக்கார் தாமே.

சூரியன் ஸ்தோத்ரம் 6 – Sooriyan Slogam

ஹனுமான் மங்களாஷ்டகம் 6

சௌந்தர்ய லஹரி – 31. அறுபத்து நாலு தந்திரங்களும் ஸ்ரீவித்தையும்

சது:ஷஷ்ட்யா தந்த்ரை: ஸகலம் அதிஸந்தாய புவனம்
ஸ்திதஸ் தத் தத் ஸித்தி ப்ரஸவ பரதந்த்ரை: பசுபதி: |
புனஸ் த்வன் நிர்பந்தாத் அகில புருஷார்த்தைக கடனா-
ஸ்வதந்த்ரம் தே தந்த்ரம் க்ஷிதிதலம் அவாதீதரதிதம் ||

அபிராமி அந்தாதி – 70. இசை, ஓவியம் இவற்றில் சிறக்க | Abirami Anthathi

கண்களிக் கும்படி கண்டுகொண்
டேன், கடம் பாடவியில்;
பண்களிக்கும் குரல் வீணையும்
கையும், பயோதரமும்,
மண்களிக்கும் பச்சை வண்ணமும்
ஆகி, மதங்கர்குலப்
பெண்களில் தோன்றிய எம்பெரு
மாட்டிதன் பேரழகே.

Narayaneeyam – நாராயணீயம் தசகம் 4.03

நாலாயிர திவ்வியப் பிரபந்தம் – 71 | Naalayira Divya Prabandham – 71

உன்னையு மொக்கலையிற் கொண்டுத மில்மருவி உன்னொடு தங்கள்கருத் தாயின செய்துவரும்,
கன்னிய ரும்மகிழக் கண்டவர் கண்குளிரக் கற்றவர் தெற்றிவரப் பெற்றவெ னக்கருளி,
மன்னுகு றுங்குடியாய்! வெள்ளறை யாய்!மதில்சூழ் சோலைம லைக்கரசே! கண்ணபு ரத்தமுதே,
என்னவ லம்களை வாய் ! ஆடுக செங்கீரை, ஏழுல கும்முடையாய்! ஆடுக ஆடுகவே.

ஸ்ரீ முருகன் கந்தர் அந்தாதி 17

சேரிக் குவடு மொழிவிழி யாடனச் செவ்விகுறச்
சேரிக் குவடு விளைந்ததன் றேநன்று தெண்டிரைநீர்
சேரிக் குவடு கடைநாளி லுஞ்சிதை வற்றசெவ்வேள்
சேரிக் குவடு புடைசூழ் புனத்திற் றினைவிளைவே.

ஆறாம் திருமுறை புக்க திருத்தாண்டகம் 4

வாரேறு வனமுலையாள் பாக மாக மழுவாள்கை யேந்தி மயானத் தாடிச்
சீரேறு தண்வயல்சூழ் ஓத வேலித் திருவாஞ்சி யத்தார் திருநள் ளாற்றார்
காரேறு கண்டத்தார் காமற் காய்ந்த கண்விளங்கு நெற்றியார் கடல்நஞ் சுண்டார்
போரேறு தாமேறிப் பூதஞ் சூழப் புலியூர்ச்சிற் றம்பலமே புக்கார் தாமே.

சூரியன் ஸ்தோத்ரம் 5