காயம லர்நிறவா! கருமுகில் போலுருவா! கானக மாமடுவில் காளிய னுச்சியிலே,
தூயந டம்பயிலும் சுந்தர வென்சிறுவா! துங்கம தக்கரியின் கொம்புப றித்தவனே,
ஆயம றிந்துபொரு வானெதிர் வந்தமல்லை அந்தர மின்றியழித் தாடிய தாளிணையாய்!
ஆய!எ னக்கொருகா லாடுக செங்கீரை,ஆயர்கள் போரேறே! ஆடுக ஆடுகவே