thiruchathagam

திருவாசகம் குழைத்த பத்து

வேண்டத் தக்கது அறிவோய் நீ வேண்ட முழுதும் தருவோய் நீ
வேண்டும் அயன் மாலுக்கு அரியோய் நீ வேண்டி என்னைப் பணிகொண்டாய்
வேண்டி நீ யாது அருள் செய்தாய், யானும் அதுவே வேண்டின் அல்லால்,
வேண்டும் பரிசு ஒன்று உண்டு என்னில் அதுவும் உன் தன் விருப்பு அன்றே.

திருவாசகம் அருள் பத்து

முத்தனே முதல்வா முக்கணா முனிவா
மொட்டு அறா மலர் பறித்து இறைஞ்சிப்
பத்தியாய் நினைந்து பரவுவார் தமக்குப்
பரகதி கொடுத்து அருள்செய்யும்
சித்தனே செல்வத் திருப்பெருந்துறையில்
செழும் மலர்க் குருந்தம் மேவிய சீர்
அத்தனே அடி யேன் ஆதரித்து அழைத்தால்
அதெந்துவே என்று அருளாயே.